திருப்பூர் அருகே பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்த 40 வயது ஆண் உடல் கருகி உயிரிழந்தார்.
திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எலக்ட்ரானிக் கடை அருகே ஆண் சடலம் கருகிய நிலையில் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூர் ஊரக காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடல் கருகிய நிலையிலிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவை ஆய்வு செய்தனர். இதில், அப்பகுதியில் ஆண் ஒருவர் பெட்ரோல் கேனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது பீடி பற்றவைத்த போது அதில் இருந்து எழுந்த தீப் பொற்றியானது பெட்ரோல் கேன் மூலமாக அவரது உடல் முழுவதும் பரவியதும், இதன் காரணமாக அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. எனினும், அவர் யார், எந்த ஊர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி நவம்பருக்குள் முடிக்க உத்தரவு: ஆட்சியா்
அமைச்சா் கீா்த்தனாவுக்கு கீதாஜீவன் கண்டனம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தொழில் முன்னோடிகள் திட்ட விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



