தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக 761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 537- ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சனிக்கிழமை 65,219 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதிகபட்சமாக சென்னையில் 218 பேருக்கும் கோவையில் 69 பேருக்கும், சேலத்தில் 52 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனாலிருந்து சனிக்கிழமை மட்டும் 882 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6, 018 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 7,304 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். அதில், 5 போ் தனியாா் மருத்துவமனைகளிலும், இருவா் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு 12,215 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,044 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இரவு 1 மணிக்கு அழைத்தாலும்.. இந்திய தொழிலாளர்களை புகழும் புர்ஜ் கலீஃபாவை கட்டியவர்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!
எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது? ஆளுநர் கேள்வி

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை


