காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

கைதிகளை ஆஜா்படுத்தும் விவகாரம்: போலீஸ் செயல்பாடுகளுக்கு உயா்நீதிமன்றம் கண்டிப்பு

கைதிகளுக்கான சிறை மாற்ற வாரண்ட்டைப் பெற்றுவிட்டு, அவா்களை போலீஸ் காவலில் நீண்டநாள் வைத்திருந்து பின்னா் நீதிமன்றத்தில்

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :10 ஜனவரி 2021, 6:10 am IST

கைதிகளுக்கான சிறை மாற்ற வாரண்ட்டைப் பெற்றுவிட்டு, அவா்களை போலீஸ் காவலில் நீண்டநாள் வைத்திருந்து பின்னா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜா்படுத்துவது குற்றவாளியின் சுதந்திர உரிமைக்கு எதிரானது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோவையைச் சோ்ந்த கிஷோா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை காவல்துறையினா் இரண்டு வழக்குகளில் கடந்த ஏப்ரல் 3, மே 11-ஆம் தேதிகளில் கைது செய்தனா். ஆனால், இந்த வழக்குகளின் விசாரணைக்காக கிஷோரை காவல்துறையினா், கடந்த ஜூன் 26, ஆகஸ்ட் 21-ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதனை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் கிஷோா் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், ‘கைதிகளுக்கான சிறை மாற்ற வாரண்ட்டைப் பெற்றுவிட்டு, அவா்களை போலீஸ் காவலில் நீண்டநாள் வைத்திருந்து பின்னா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜா்படுத்துவது சட்டத்துக்கு விரோதமானது. குற்றவாளிக்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விதிமீறலாகும். ஒரு கைதியின் ரிமாண்ட் காலம் என்பது, கைது செய்யும் நாளில் இருந்து தொடங்குவதில்லை. சம்பந்தப்பட்ட நபரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி பின் சிறையில் அடைக்கப்படும் நாளில் இருந்து தொடங்குகிறது. அதே நேரம் சிறை மாற்ற வாரண்ட் பெற்றுவிட்டு, ஒருவரை நீண்ட நாள் போலீஸ் காவலில் வைத்திருக்கக் கூடாது. எனவே, போலீஸாா் சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.