மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக பிரமுகர் வீட்டில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3,53,000 பணம் பறிமுதல்

சென்னப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் வீட்டில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3,53,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

News image
சென்னப்பநாயக்கனூர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள்.
Updated On :5 ஏப்ரல் 2021, 10:51 am

DIN

சென்னப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் வீட்டில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3,53,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஊத்தங்கரை சட்டப்பேரவை தனி தொகுதிக்குள்பட்ட சென்னப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ராமு. இவர் வாக்குக்குப் பணம் கொடுக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர். 

தகவலின் பேரில் கட்டுப்பாட்டு அறை அலுவலர் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சென்னப்ப நாயக்கனூரில் உள்ள ராமு வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு விரைந்து சென்ற மோகன் தலைமையிலான அலுவலர்கள் சோதனை செய்தனர். 

சோதனையில் ராமு விட்டில் உரிய ஆவணம் இன்றி இருந்த 2,33,500 ரூபாய், வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள், பூத் ஸ்லிப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் அலுவலர் சேதுராமலிங்கம் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அதே வீட்டில் மீண்டும் பணம் வைத்திருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சந்தோஷ்குமார் தலைமையிலான அலுவலர்கள் விடியற்காலை 4 மணியளவில் மீண்டும் சோதனை செய்தனர். 

ராமு வீட்டில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1,20,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சேதுராமலிங்கம் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.