போடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது: வாக்குப்பதிவு தாமதம்
போடியில் இரண்டு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.


போடி: போடியில் இரண்டு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.
போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போடி பழைய பேருந்து நிறுத்தம் அண்ணா நினைவு நடுநிலைப் பள்ளியில் ஒரு வாக்குச் சாவடியில் இயந்திரம் பழுதானது.
இதனால் வாக்குப் பதிவு தாமதம் ஆனது. 40 நிமிடத்திற்கு பின் இயந்திரம் சரி செய்யப்பட்ட பின் வாக்குப் பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர்.
போடி துரைராஜபுரம் காலனியில் உள்ள வாக்குச் சாவடியிலும் இயந்திரம் பழுதானதால் சிறிது நேரம் தாமதம் ஆனது. மற்ற பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...