இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மே.5ஆம் தேதி சென்னையில் வணிகர்கள் சங்க மாநாடு: ஏ.எம்.விக்கிரமராஜா

சென்னையில் வணிகர்கள் சங்க மாநாடு வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதில் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் 

News image
Updated On :8 ஏப்ரல் 2021, 2:32 pm

DIN

சென்னையில் வணிகர்கள் சங்க மாநாடு வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதில் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காஞ்சி மண்டல தலைவர் எம்.அமல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு ஏ.எம்.விக்கிரமராஜா பேசியது, கரோனா அச்சுறுத்தல் என்ற பெயரில் சிறுவியாபாரிகளை அதிகாரிகள் அதிக அளவில் இடையூறு செய்கிறார்கள்.

வணிகர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசாமல் அதிகாரிகள் கரோனா கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். ஏற்கனவே சிறு வியாபாரிகள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கிப் போய் இருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் மீண்டும் சாலையோர வியாபாரிகளை கரோனாவை காரணம் கூறி அப்புறப்படுத்த நினைப்பது தவறானது. அதே நேரத்தில் மதுக்கடைகளை அடைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. 

இதே நிலை தொடர்ந்தால் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநாடு வரும் மே மாதம் 5 ஆம் தேதி சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்ற இருக்கிறோம். பறக்கும்படை அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் பணம் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக வணிகர்கள் விற்பனைக்கு கொண்டு சென்ற பணத்தை தான் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

பறிமுதல் செய்த பணத்தை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திருப்பித்தர வேண்டும். தமிழகம் முழுவதும் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் தேர்தலை சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையரை பாராட்டுவதாகவும் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார். பேட்டியின் போது காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வி.ரங்கநாதன், மாவட்ட செயலாளர் ஏ.வேலுமணி உட்பட செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.