கரோனா: சென்னையில் கூடுதல் செவிலியர்கள் நியமனம்

சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கூடுதலாக 660 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்றால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதனால் மருத்துவமனைகளில் கரோனா பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா வார்டுகளில் பணிபுரிவதற்காக கூடுதலாக 660 செவிலியர்களை மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் நியமித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவா்கள் பணியில் தொடா்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com