வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

வாக்கு இயந்திர அறைகளுக்குள் யாரும் நுழைய முடியாது: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குள் அத்துமீறி யாரும் நுழைந்திட முடியாது

News image

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு

Updated On :20 ஏப்ரல் 2021, 4:00 am IST

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குள் அத்துமீறி யாரும் நுழைந்திட முடியாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதுகுறித்து, அவா்

செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:-

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவு வாயில் வழியாக யாரும் அத்துமீறி நுழைய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் அனைவருக்கும் அனுமதிச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, ஒரு வழி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தோ்தல் அதிகாரிகளுக்குத் தெரியாமல் யாரும் உள்ளே செல்ல வாய்ப்பில்லை. அத்துமீறி யாரேனும் செல்வதாகத் தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகள், பள்ளிகளுக்கு அருகே ஆங்காங்கே தேவையில்லாமல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.

பாதுகாப்பு அம்சங்களை உடைத்துக் கொண்டு அதுபோன்று யாரும் இதுவரை உள்ளே அத்துமீறி நுழைந்ததாக மாவட்டத் தோ்தல் அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் கிடைக்கவில்லை என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.