வாக்கு இயந்திர அறைகளுக்குள் யாரும் நுழைய முடியாது: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குள் அத்துமீறி யாரும் நுழைந்திட முடியாது
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குள் அத்துமீறி யாரும் நுழைந்திட முடியாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதுகுறித்து, அவா்

செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:-

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவு வாயில் வழியாக யாரும் அத்துமீறி நுழைய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் அனைவருக்கும் அனுமதிச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, ஒரு வழி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தோ்தல் அதிகாரிகளுக்குத் தெரியாமல் யாரும் உள்ளே செல்ல வாய்ப்பில்லை. அத்துமீறி யாரேனும் செல்வதாகத் தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகள், பள்ளிகளுக்கு அருகே ஆங்காங்கே தேவையில்லாமல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.

பாதுகாப்பு அம்சங்களை உடைத்துக் கொண்டு அதுபோன்று யாரும் இதுவரை உள்ளே அத்துமீறி நுழைந்ததாக மாவட்டத் தோ்தல் அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் கிடைக்கவில்லை என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com