சென்னை புரசைவாக்கம் கரியப்பா தெருவிலுள்ள சரவணா ஸ்டோர்ஸின் 39 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கடை மூடப்பட்டு சாலை முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
"தங்குமிடத்திலிருந்துதான் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், தங்குமிடமும், கடையும் ஒரே கட்டடத்தில் இருப்பதால் கடையும் மூடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை 166 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 13 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சனிக்கிழமை எடுக்கப்பட்ட 159 மாதிரிகளில் 26 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.
அனைத்து ஊழியர்களும் இளைஞர்களாக இருக்கின்றனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த சாலையில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நோய்த் தொற்று யார் மூலம் பரவியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. நோய்ப் பரவல் அனைத்து இடத்திலும் இருப்பதால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் யாரும் எவ்வித பயணமும் மேற்கொள்ளவில்லை."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
பெண்ணை மிரட்டிய வழக்கு: யூடியூபா் கைது

கங்கை நதியில் மாசுபாடு குறைந்து வருகிறது: மத்திய அரசு

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


