கம்பம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு பற்றாக்குறை

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு பற்றாக்குறை
கம்பம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு பற்றாக்குறை
Updated on
1 min read

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் இதுவரை சுமார் 1000 பேர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் இரண்டாவது முறையாக முதல் தவணையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 முதல் 8 வாரம் கழித்து இரண்டாவது முறையாக போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி இரண்டாவது தவணையாக கோவிட் சீல்டு தடுப்பூசி போடச்சென்ற போது இருப்பு இல்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டாவது முறையாக தடுப்பூசி போட சென்றவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இது பற்றி பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் பரதன் கூறியது, 

நானும் எனது மனைவியும் கம்பம் அரசு மருத்துவமனையில் மார்ச்11ல் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். 28 நாள்கள் கழித்து இரண்டாவது தவணை ஊசி போடுவதற்காக சென்றபோது 42 நாள்கள் கழித்து வாருங்கள் என்றனர், காலம் கடந்து ஊசி போட்டுக்கொண்டால் மருந்து வீரியம் இருக்காது என்பதற்கு, ஊசி இருப்பு இல்லை என்கின்றனர் என்றார். 

இது பற்றி தலைமை மருத்துவர் பொன்னரசனிடம் கேட்ட போது கோவிட் சீல்டு ஊசி மருந்து வரவேண்டியுள்ளது. இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம், வந்தவுடன் இரண்டாவது தவணை
போடப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com