டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இதில் எதை தெரிவு செய்யப் போகிறீர்கள்? காவல்துறை கேள்வி

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. 

News image
இதில் எதை தெரிவு செய்யப் போகிறீர்கள்? காவல்துறை கேள்வி
Updated On :22 ஏப்ரல் 2021, 12:18 pm

DIN

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. 

முந்தைய பாதிப்பை விடவும், இரண்டாவது கரோனா அலையின்போது, கரோனா தொற்று பாதித்த பாதிக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிறது புதிய புள்ளி விவரம்.

அதாவது, நேற்று காலை நிலவரப்படி சென்னையில் 28 ஆயிரம் கரோனா நோயாளிகள் இருந்தனர். இவர்களில் சுமார் 12 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடே அல்லலுற்று வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல அமைப்புகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் சென்னை காவல்துறை தரப்பில் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு, இதில் எது ஒன்றை தெரிவு செய்வதும் மிகவும் எளிது. பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படம் இதுதான்.

Story image

இந்தப் புகைப்படத்தில் முகக்கவசம் அணிவது, தனிமைப்படுத்திக் கொள்வது போன்றவற்றை தெரிவு செய்யவில்லை என்றால், அதற்கு நேரெதிரான கரோனாதொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது மற்றும் கரோனாவுக்கு பலியாவது போன்றவை நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது மூக்கு மற்றும் வாயை மறைத்து முகக்கவசம் அணியுங்கள். அல்லது மரணத்தைத் தழுவி முகத்தையே மூட வேண்டியிருக்கும் என்பது போல  இந்த விழிப்புணர்வு புகைப்படம் அமைந்துள்ளது.

எனவே.. மக்கள் முகக்கவசத்தின் அவசியத்தை உணர்ந்து, அதனை கடமைக்காக போட்டுக் கொண்டிருக்காமல், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை முழுமையாக மூடியபடி போடுவது அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.