கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காரியாபட்டி அருகே 3 பேர் விஷம் கலந்த உணவை உண்டு உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முஸ்டக்குறிச்சியில் குடும்ப பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் கலந்த உணவை உண்டதில் உயிரிழந்தனர்.

News image
காரியாபட்டி அருகே 3 பேர் விஷம் கலந்த உணவை உண்டு உயிரிழப்பு
Updated On :27 ஏப்ரல் 2021, 5:29 am

DIN


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முஸ்டக்குறிச்சியில் குடும்ப பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் கலந்த உணவை உண்டதில் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி சேர்ந்தவர் அடைக்கலம் (78), இவரது மகள் முனியம்மாள் (45), பேத்தி ஜெயலலிதா (17). இதில் பாட்டி அடைக்கலம் மட்டும் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டருகே மகளும் பேத்தியும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவை, தனது அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர்.

அவருக்கு 18 வயது முடிந்தவுடன் திருமணம் முடிக்க முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் முனியம்மாள் உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தாராம். மேலும் அடைக்கலத்திற்கும் முனியம்மாளுக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு அடைக்கலம் முனியம்மாள் ஜெயலலிதா ஆகிய மூவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளனர். காலையில் அடைக்கலம் வீட்டு கதவு திறக்கப்படாதது கண்டு அருகில் வசிப்போர் பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரிந்தது.

மேலும் முனியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரும், மகள் ஜெயலலிதாவும் உயிரிழந்திருப்பது தெரிந்தது. தகவலறிந்த ஆவியூர் காவலர்கள், மூன்று பேரது சடலத்தை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.