பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் பயணிகளிடம் கூறுகையில், மத்திய அரசு ஏற்பாட்டின்பேரில், திருச்சி விமான நிலையத்தில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும். கரோனா பரிசோதனை சான்றுகளை, துபை விமான நிலையத்தில் அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறது. மீண்டும் அங்கே கட்டணம் செலுத்தி சோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். ஆனால் சார்ஜாவில் ஏற்றுக்கொள்கின்றனர். இதனால் துபை பயணிகளை அருகில் உள்ள சார்ஜா விமான நிலையத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் விமான நிறுவனம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.