மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

'கைதட்டலாமே..' வேளாண் துறை அமைச்சரின் ருசிகர பேச்சு

கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2,750-லிருந்து ரூ.2,900க்கு உயர்த்தி அறிவித்தார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

News image

'கைதட்டலாமே..' வேளாண் துறை அமைச்சரின் ருசிகர பேச்சு

Updated On :14 ஆகஸ்ட் 2021, 11:34 am

DIN


சென்னை: கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2,750-லிருந்து ரூ.2,900க்கு உயர்த்தி அறிவித்தார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் அறிவித்ததாவது, 

ரூ.2,750-ல் இருந்து கரும்பு கோள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,900 ஆக உயரும் என்று கூறினார். அப்போது, அவையில் இருந்தவர்களைப் பார்த்து கைதட்டலாமே.. என்று கூறினார். கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை உயர்ந்திருக்கிறதே.. இதற்கு கைதட்டலாமே என்று சிரித்தபடியே கேட்டார்.

இதைக் கேட்டதும் அவையிலிருப்பவர்கள் கைதட்டி தங்களது வாழ்த்துகளை அவையில் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் உயர்த்தப்படும். கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இதன் மூலம், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்பு கொள்முதல் விலையாக ரூ.2,900 வீதம் பெறுவார்கள். 

விவசாயிகள் புதிய வகை கரும்பு ரகங்களை சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.