
சென்னை: தமிழக நெல் விவசாயிகளுக்கு ரூ.52.02 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் வேளாண் அமைச்சர் கூறுகையில்,
கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
விவசாயத்துக்கான இலவச மின்சார திட்டத்துக்கு மின் வாரியத்துக்கு ரூ.4,508.23 கோடி நிதி வழங்கப்படும்.
மேலும் பார்க்க.. வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் முழு விவரம்
வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு அமைக்கப்படும்.
இயற்கை விவசாயிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.