சென்னையில் கரோனா சிகிச்சையில் 2,080 பேர்: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,080 ஆக உள்ளது. 
சென்னையில் கரோனா சிகிச்சையில் 2,080 பேர்: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்
Updated on
1 min read

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,080 ஆக உள்ளது. 

திங்கள்கிழமை மாலை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சென்னையில் புதிதாக 205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 235 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில்  இதுவரை மொத்தமாக 5,41,402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது சென்னையில் 2,080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவுக்கு 8,363 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,30,959 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று மட்டும் சென்னை மாநகராட்சியில் 24,454 பேர் உள்பட இதுவரை 35,15,561 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com