தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி அம்மாள் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க | தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்
தெலங்கான ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனின் தாயாரும், முதுபெரும் இலக்கியவாதி குமரிஅனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி (78) அம்மாள், சென்னையில் புதன்கிழமை அதிகாலை இயற்கை எய்தினார்.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கிருஷ்ணகுமாரி அம்மாள் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதையும் படிக்க | கரோனா பாதிப்பில் மீண்டும் சென்னையை முந்தியது கோவை
கிருஷ்ணகுமாரி அம்மாள் மறைவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.