மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தடுத்து விசாரித்த காவல்துறையினர்: மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்ததால் கூட்டத்தை புறக்கணித்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.

News image
தருமபுரியில் கூட்டத்தை புறக்கணித்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள்.
Updated On :27 ஆகஸ்ட் 2021, 9:26 am

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்ததால் கூட்டத்தை புறக்கணித்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கூட்டத்திற்கு பங்கேற்க மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கூட்டம் நடைபெறும் வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி நகர காவல்துறையினர் உறுப்பினர்களிடம் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கண்டு அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் யசோதா மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் நடைபெற இருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க மொத்தமுள்ள 17 உறுப்பினர்கள் கூட்ட‌ வளாகத்துக்குள் வருகை தந்தோம். ஆனால், நாங்கள் யாரும் கேட்காமலேயே இந்த வளாகத்தில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் காவல்துறையினர் எங்களை தடுத்து விசாரித்தனர். மொத்தமுள்ள‌ 17 உறுப்பினர்களும் அரசியல் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.

இதுவரை இந்த வளாகத்தில் நடைபெற்ற எந்த கூட்டத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு கோரியதில்லை. தற்போது எங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரிக்கின்றனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறேம் என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சி செயலாளர் மாரிமுத்து ராஜ் கூறியது: மாவட்ட ஊராட்சிக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ பங்கேற்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காவல்துறையினர் விசாரித்திருக்கலாம்‌. மேலும், கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் கூட்டத்தை தவிர்க்க காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் தலைவரின் தலைமையில் நடைபெற உள்ளது. வேறெந்த நோக்கமும் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.