மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருநெல்வேலியில் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல் 

திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகே கட்டுமான தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 

News image
சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோர்.
Updated On :2 டிசம்பர் 2021, 8:26 am

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகே கட்டுமான தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 

திருநெல்வேலி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல சங்கம் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் ஆர். மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். 

பெயிண்டர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்படும் தனியார் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்;  இயற்கை மரணமடையும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்;  கம்பி, சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.