அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மணிகண்டன் மரணம்: சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்

முதுகுளத்தூர் மணிகண்டன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 10:18 am

DIN

முதுகுளத்தூர் மணிகண்டன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, நீர்கோழியந்தல் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் அவரது இரு நண்பர்களை கடந்த 4.12.2021 அன்று மாலை  முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் காவல்துறையினர் மறித்துள்ளனர். மற்ற இருவரும் காவல்துறையினருக்கு பயந்து தப்பி சென்று விட மணிகண்டனை பிடித்த காவல்துறை அங்கேயே கடுமையாகத் தாக்கியதோடு, மேல் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கடுமையாக தாக்கியுள்ளதோடு, அவர்கள் கஞ்சா வைத்திருந்தார்கள் எனும் போலியான ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்கிறது.

அன்று இரவு 7.30 மணியளவில் கீழத்தூவல் காவல்நிலையத்திலிருந்து மணிகண்டனை அவரது அம்மாவும், உறவினரும் அழைத்து வந்துள்ள நிலையில், 5.12.2021 அன்று அதிகாலை 3.30 மணியளவில் மணிகண்டன் இரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார். முதல் நாள் காவல்துறையினர் அழைத்துச் செல்கிற போது மிகவும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் சென்ற மணிகண்டன் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்து போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து மணிகண்டனின் பெற்றோர் கேட்டபோது, அவருக்கு முறையான விளக்கத்தை அளிக்காமல் இராமநாதபுரம் மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர், மணிகண்டனின் இறப்பு தற்கொலையாகவோ, பாம்பு கடித்ததாலோ தான் சம்பவித்திருக்க முடியும் எனவும் கூறியுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் எந்தவித
அத்துமீறல்களும் நடக்கவில்லை என காவல்துறை ஊடகங்களில் தன்னிச்சையாக வெளியிட்ட செய்திகளும் வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது.

பொது இடத்திலும், காவல் நிலையத்திலும் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலால்தான் மணிகண்டன் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை குற்றத்திற்கான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டுமெனவும், உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. மேலும், தமிழகத்தில் இத்தகைய தன்மையில் தொடரும் மோசமான காவல் நிலைய குற்றங்களையும், அத்துமீறல்களையும் தடுத்து நிறுத்திட உடனடியான
நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.