புத்தூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகள் அடகு:  நகை மதிப்பீட்டாளர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

சீர்காழி அருகே புத்தூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்த நகை மதிப்பீட்டாளர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகள் அடகு வைத்த நகை மதிப்பீட்டாளர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்.
வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகள் அடகு வைத்த நகை மதிப்பீட்டாளர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்.
Published on
Updated on
1 min read


சீர்காழி: சீர்காழி அருகே புத்தூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்த நகை மதிப்பீட்டாளர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சீர்காழி மதினா நகரை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் நகை மதிப்பீட்டாளர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி வாடிக்கையாளர்களிடம் பேசி நகைகளை அடகு வைக்க உதவி கேட்டாராம். அதன்பேரில் அவர்கள் அடகுவைத்து கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நகைகள் அனைத்தும் போலி என்பது ஆய்வின் போது தெரிய வந்தது.

இதனை அடுத்து நகை மதிப்பீட்டாளர் கலைச்செல்வனுக்கு அடகு வைக்க உதவியதாக கூறி இருபத்தி எட்டு பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. இதில், சிலர் ஓய்வு ஊதியம் பெறும் நிலையில் உள்ள முதியவர்களும் உள்ளனர். 

தங்களுக்கும் இந்த முறை கேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என 28 பேரும் உறுதி அளித்துள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட கலைச்செல்வன் வாடிக்கையாளர்களுக்கு முறைகேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து தனது வீட்டை வங்கியின் பெயரில் பிணையாக கொடுத்துள்ளதாக தெரிகிறது. 

ஆனால் இதுவரை வங்கி அந்த வீட்டை எதுவும் செய்யாமலும் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறதாம். 28 பேரின் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இருபத்தி எட்டு பேரும் நகை மதிப்பீட்டாளர் கலைச்செல்வனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலி நகைகளை அடகு வைத்த கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வங்கி கணக்குகளை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com