இந்த நிலையில் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் அச்சிறுப்பாக்கம் மலைமாதா தேவாலயத்திற்கு செல்லும் வழியில் செங்கல்பட்டு இருங்குன்றப்பள்ளி அருகே பாலாற்றில் குளிப்பதற்காக ஓடும் தண்ணீரை பார்த்ததும் உற்சாகத்தில் ஆற்றில் இறங்கியுள்ளனர்.
அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக லியோன்சிங்கராஜா (38)அவரது மகள் 12ஆம் வகுப்பு படித்து வரும் பெர்சி (16), லியோன் சிங்கராஜாவின் அண்ணன் சேகர் என்பவரின் மகன் லெனின்ஸ்டன்(20) உள்ளிட்ட மூவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அடித்துச் செல்லப்பட்ட மூவரும் கிடைக்காததால் தொடர்ந்து இரண்டு நாளாக செங்கல்பட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் படகு மூலம் மூன்று குழுக்களாக பிரிந்து கடுமையாக தேடியும் சடலங்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த நிலையில் ஒருவழியாக ஒன்றன்பின் ஒன்றாக பெர்ஸி மற்றும் லியோன் சிங்கராஜா உள்ளிட்ட இரண்டு சடலங்களை ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டனர்.