அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாமக்கல்லில் அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம்: திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்பு

நாமக்கல்லில் 52-ஆவது அண்ணா நினைவு தின ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் தலைமை வகித்தார்.

News image
நாமக்கல்லில் அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம்: திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்பு
Updated On :3 பிப்ரவரி 2021, 5:16 am

DIN

நாமக்கல்:  நாமக்கல்லில் 52-ஆவது அண்ணா நினைவு தின ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் தலைமை வகித்தார்.

காலை 8 மணிக்கு சேலம் ரோட்டில் துவங்கி மோகனூர் சாலையில் அண்ணா சிலை நோக்கி அமைதி ஊர்வலமாகச் சென்று பிறகு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாமக்கல் நகர கட்சி பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் மாவட்ட துணை செயலாளர் இராமலிங்கம், மாநில இலக்கிய அணி புரவலர் சி மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பவித்திரம் கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், ஒன்றிய செயலாளர் வி கே பழனிவேல், பார் கவுன்சில் கௌரவ செயலாளர் வழக்கறிஞர் அய்யாவு  மற்றும் நிர்வாகிகள் திமுக முன்னோடிகள் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அமைதியாக ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

பின்னர் அண்ணா  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.