தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையால் ஏறத்தாழ ஒரு லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதுதவிர நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தன.
இதுதொடர்பாக மத்திய குழுவைச் சார்ந்த மத்திய அரசின் மீன்வளத் துறை மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டியன், மத்திய மின் துறையின் மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குநர் ஷூபம் கார்க், சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக மண்டல அலுவலர் ரணஞ்ஜெய் சிங் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
பட்டுக்கோட்டை அருகே நம்பிவயல் கிராமத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம் "சம்பா பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்குச் சாப்பாட்டுக்கு அரிசி கூட கிடைக்காது. கால்நடைகளுக்கு வைக்கோல் இருக்காது. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ், வேளாண் துறை இணை இயக்குநர் அ. ஜஸ்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...