சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த சசிகலா மற்றும் தினகரன் தரப்பு முயற்சித்து வருவதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக கொடியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி டிஜிபியை அமைச்சர்கள் இன்று மீண்டும் சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறையிலிருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்புவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், டிஜிபி, முப்படைத் தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் எங்களை யாராலும் தடுக்க முடியாது என்று தினகரன் கூறி வருகிறார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தோடு சசிகலா, தினகரன் தரப்பினர் செயல்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.