நான் செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார்: முதல்வர் பழனிசாமி பேச்சு
நான் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார்; ஆனால் நான் செய்வதைத்தான் அவர் சொல்கிறார் என முதல்வர் பழனிசாமி பேசினார்.


நான் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார்; ஆனால் நான் செய்வதைத்தான் அவர் சொல்கிறார் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். போரூரில் திறந்த வேனில் நின்று பரப்புரை மேற்கொண்ட அவர், திமுக கட்சியல்ல, அது கார்ப்பரேட் கம்பெனி. திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசி வருகிறார். நான் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார்; ஆனால், நான் செய்வதைத்தான் அவர் சொல்கிறார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கட்சி திமுக. அதிமுக ஆட்சியை எந்தக் காரணத்தாலும் திமுகவால் வீழ்த்த முடியாது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக சார்பில் வாங்கபட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, அம்பத்தூரில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மத்தியில் பேசிய முதல்வர் இன்று ஆவடி, மீஞ்சூர், மாதவரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பரப்புரை மேற்கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...