அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பெட்ரோல் விலை ரூ.90-ஐ கடந்தது: வாகன ஓட்டிகள், வணிகர்கள் கலக்கம்

பெட்ரோல், டீசல் விலை வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியநிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.18 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:30 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியநிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.18 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள், வணிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கடந்த 2017, ஜூன் 15-ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிா்ணயிக்கப்படும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. கரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த நடைமுறையில் சற்று மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் எரிப்பொருள்களின் விலைகள் ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வியாழக்கிழமை 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 90.18 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் டீசல் ஒரு லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.83.18 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வணிகர்கள், வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.

பெட்ரோல் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிவருவதால் அத்தியாவசிப் பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

மும்பையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.94. 36 ஆகவும், தில்லியில் ரூ.87.85 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.89.16 ஆகவும், பெங்களூருவில் ரூ.90.48 ஆகவும், ஜெய்ப்பூரில் ரூ.94.25 ஆகவும்,  விற்பனையாகிறது. பெட்ரோல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி மட்டும் 61 சதவீதத்துக்குமேல் உள்ளது. இதுவே, டீசல் மீது மத்திய, மாநில அரசுகளின் வரி 56 சதவீதமாக உள்ளது.

உள்ளூா் விற்பனை வரியைப் பொருத்து மாநிலத்துக்கு மாநிலம் எரிபொருள்களின் விலையில் மாறுபாடு இருக்கும். இருப்பினும், தற்போதைய நிலையில் பெட்ரோல் டீசல் விலையானது இதுவரையில்லாத புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.

விலையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கையைாக உள்ளது. எனினும், இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியைக் குறைப்பதன் மூலம், அவற்றின் விலையைக் குறைக்கும் திட்டமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.