மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கண்ணை மூடியிருந்தால் கூட அதிமுக ஆட்சியின் குறைகள் தெரியும்: ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் கானையில், திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின்
Updated On :17 பிப்ரவரி 2021, 5:31 pm

DIN

விழுப்புரம் மாவட்டம் கானையில், திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

மூன்றாம் கட்டமாகத் தொகுதி வாரியாக சென்று மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்து வருகிறேன். ஒட்டுமொத்த மக்களும் இந்த ஆட்சியை நடக்கவில்லை என்பதைத் தெரிவிக்கும் வகையில் குறைகளைத் தெரிவித்து வருகின்றனர். மூன்று மாத காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறைகள், கவலைகள் தீர்க்கப்படும். நான் குறைகளைக் கேட்பதை அறிந்த முதல்வர் பழனிசாமி, செல்போனிலேயே குறைகளைச் சொல்லலாம் தீர்க்கப்படும் எனச் சொல்கிறார்.

எந்த குறையுமில்லை நாட்டில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டதாக அவர் சொல்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் எங்கே போயிருந்தார். ஆட்சிக் காலத்திலேயே கோரிக்கையைச் சரி செய்திருக்க வேண்டும். பூதக் கண்ணாடியால் பார்த்தாலும் ஆட்சியில் குற்றம் காண முடியாது என்கிறார் பழனிச்சாமி. கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே குற்றங்கள் சத்தமாகக் கேட்கும்.

விழுப்புரத்தில் கட்டிய தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்தது அதற்குச் சாட்சி. தரமற்ற அணையைக் கட்டிய ஒப்பந்ததாரரைக் கைது செய்யாதது ஏன். சிவி சண்முகம் மரியாதையாகப் பேச கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்திற்கு அவர் முதலில் என்ன செய்திருக்கிறார்.

நந்தன் கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்தவில்லை எந்த பணியும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. இவர்களிடமிருந்து ஆட்சியை மீட்டு திமுக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்றார். 

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி, மாநில விவசாய அணி துணைச் செயலர் அன்னியூர்சிவா உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.