கீரனூரில் கார் விபத்து: சென்னையைச் சேர்ந்த தந்தை, குழந்தை பலி; 6 பேர் காயம்
சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த கார் சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தந்தை மற்றும் அவரது 2 வயது குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


புதுக்கோட்டை: சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த கார் சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தந்தை மற்றும் அவரது 2 வயது குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ராமன் தனது உறவினர்களுடன் காரில் காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
கார் சனிக்கிழமை காலை 6 மணியளவில் கார் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பொக்கன்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது ஓரத்தில் இருந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ராமன் (35), அவரது மகன் ரட்சன் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காரில் வந்த பாலையா (68), சிவகாமி (22), லட்சுமி (50), தர்வேஸ் (5), ஜெயந்தி (25), நந்தினி (30) ஆகியோர் காயமடைந்தனர்.
கார் ஓட்டுநர் ப. சிலம்பரசன் (34) காயமின்றி உயிர்தப்பினார்.
காயமடைந்தோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...