கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சம்

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில், அவிழ்த்து விடப்பட்ட காளைகள், அதன் உரிமையாளர்களிடம் கிடைக்காமல் சுற்றித் திரிவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:33 pm

DIN

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில், அவிழ்த்து விடப்பட்ட காளைகள், அதன் உரிமையாளர்களிடம் கிடைக்காமல் சுற்றித் திரிவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் கடந்த 6ஆம் தேதி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 559 காளைகள் பங்கேற்றன. 

இதில், பல காளைகள், வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து ஓடியது. அவ்வாறு ஓடிய 30க்கும் மேற்பட்ட காளைகள், மைதானத்தில் அமைக்கப்பட்ட, கலெக்சன் பாயிண்ட் எனப்படும் இடத்தில், காளை உரிமையாளர்களிடம் கூட பிடிபடாமல் ஓடியது. அவ்வாறு ஓடிய 30க்கும் மேற்பட்ட காளைகள், தம்மம்பட்டி கருமாயி வட்டத்தில் உள்ள வேங்கடத்தான் கரடு, ஒன்பதாம்பாலி கரடு செல்லும் வழியில் உள்ள முருகன் கோயில் கரடு பகுதியில் சுற்றித் திரிகின்றன. 

பகல் நேரத்தில் மலைக்காடுகளின் மேல் மறைந்து கொள்ளும் காளைகள், இரவு நேரத்தில், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.