கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்ததை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

News image

தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை

Updated On :25 பிப்ரவரி 2021, 7:44 am

DIN

தூத்துக்குடி: போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்ததை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும், ஓய்வு பெறும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச சி.ஐ.டி.யு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து வழக்கமாக 64 அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது வரை 9 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகரில் இருந்து தூத்துக்குடி, நெல்லை , மதுரை, தென்காசி,‌ சங்கரன்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் முற்றிலுமாக இயங்கவில்லை. இதனால் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வந்த கிராம மக்கள் கிராமத்திற்கு செல்ல பஸ் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் தங்கள் குழந்தைகளுடன் பஸ்நிலையத்தில் காத்திருந்தனர். 

சிலர் ஆட்டோவிலும், கிராமங்களை கூடிய இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு செல்லக்கூடிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் கிராமங்களில் இருந்து வரக்கூடிய பள்ளி கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.