கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவள்ளூர் அருகே கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் தொடங்கியது

தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை (ஜன.2) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா ஒத்திகையில் சுகாதாரப் பணியாளர்கள்.
Updated On :2 ஜனவரி 2021, 5:12 am

DIN


 
தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை (ஜன.2) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கரோனா தடுப்பூசி ஒத்திகை மாநில அளவில் அனைத்து வசதியும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 17 இடங்களில் நடைபெறும் என அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளுர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துமனை, திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நேமம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை தொடங்கியது.

Story image

இதில், திருவள்ளூர் அருகே நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா ஒத்திகை முகாமை சுகாதார துணை இயக்குநர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பதிவு செய்யும் இடம், கணிப்பொறியில் சரிபார்ப்பு, தடுப்பூசி அளிக்கும் இடம் மற்றும் மேற்பார்வை அறை ஆகியவைகளை பார்வையிட்டார். 

Story image

இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக  தேர்வு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் 25 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முதலில் ஆதார் அட்டை சரிபார்த்தல், பிறகு கணினியில் பெயர் உள்ளதா என்று சரி பார்த்தல் பிறகு அவர்களுக்கு தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிறகு அவர்கள் மேற்பார்வை அறையில் தங்க வைக்கப்பட்டனர். அரை மணி நேரம் கழித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்

இதில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சதீச்குமார், டாக்டர் பிரதீபா ஆகியோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.