கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜன. 8 முதல் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை: ராதாகிருஷ்ணன்

ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 ஜனவரி 2021, 6:30 am

DIN

ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இன்னும் 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. 

இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: 

தமிழகத்தில் தற்போது 5 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் நிலையில், வருகிற ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இதற்காக 33 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நாளை 45 இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன. 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

சுமார் 2 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைக்க சென்னை மத்திய மருந்து சேமிப்புக் கிடங்கில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளைத் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.