இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக வெள்ளக்கோவிலில் முழு கடையடைப்பு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு துவங்கியது. அதிகாலை முதல் 100 சதவீதம் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

News image
வெள்ளக்கோவிலில் மூடப்பட்டிருந்த கடைகள்.
Updated On :19 ஜனவரி 2021, 5:56 am

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு துவங்கியது. அதிகாலை முதல் 100 சதவீதம் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் உள்ளது. வானம் பார்த்த பூமியான இப்பகுதிக்கு மிகச்சிறந்த குடிநீர் ஆதாரமாகவும், விவசாயம், கால்நடை வளர்ப்பு, கம்பு, சோளம் போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யவும், காய்கறிகள் சாகுபடிக்கும் இந்த வாய்க்கால் பாசனம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

காங்கயம் - வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் அரசு விதிமுறைப்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு 2 சுற்று தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் 3 நாள் மட்டுமே திறந்து, 28 நாள்கள் அடைக்கப்படுகிறது. 
பொதுப்பணித்துறைக்குத் தெரிந்தே வாய்க்காலில் நடக்கும் தண்ணீர் திருட்டைத் தடுத்து, தங்களுக்கு முறைப்படி தண்ணீர் திறக்க வேண்டுமென பல மாதங்களாக அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தியும் கண்டு கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள், சமூக நல அமைப்புகள் விடுத்திருந்த அழைப்பை ஏற்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதே போல காங்கயத்திலும் கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

காங்கயம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதையும் கடந்து, தனியாருக்குச் சொந்தமான இடத்தில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.