நிவர், புரெவி புயல் தாக்குதலுக்கு பின்னர் பெய்த கன மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் முற்றிலுமாக அழிந்துள்ளதை கவனத்தில் கொண்டு அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பெறப்பட்ட கடன்கள் அனைத்தையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழு அளவிலான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி அளிக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. பழனிசாமி முன்னிலையில் அழுகிய பயிர்கள் நெற்கதிர்களுடன் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர்.