இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நெற்பயிர் அழிவு: இழப்பீடு கோரி இந்திய கம்யூ. மறியல்

நிவர், புரெவி புயல் தாக்குதலுக்கு பின்னர் பெய்த தொடர் கனமழையால் அழிந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன

News image
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்றோர்
Updated On :20 ஜனவரி 2021, 6:18 am

DIN


திருத்துறைப்பூண்டி:  நிவர், புரெவி புயல் தாக்குதலுக்கு பின்னர் பெய்த தொடர் கனமழையால் அழிந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

நிவர், புரெவி புயல் தாக்குதலுக்கு பின்னர் பெய்த கன மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் முற்றிலுமாக அழிந்துள்ளதை கவனத்தில் கொண்டு அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பெறப்பட்ட கடன்கள் அனைத்தையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழு அளவிலான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி அளிக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. பழனிசாமி முன்னிலையில் அழுகிய பயிர்கள் நெற்கதிர்களுடன் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர்.

இந்த சாலை மறியலில் அக்கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வழக்குரைஞர் எம். வையாபுரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.வி. சந்திரராமன், வி. முத்துக்குமரன், ஒன்றியக்குழு தலைவர் ஆ பாஸ்கர் கட்சியின் வட்டார செயலாளர் மணலி பாலு நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 11 இடங்களிலும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையில் 7 இடங்களிலும் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.