தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெருகவாழ்ந்தானில் அழுகிய நெல் பயிர்களுடன் விவசாயிகள் சாலைமறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர்

News image
பெருகவாழ்ந்தானில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் இழப்பீடு,  நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகள்.
Updated On :23 ஜனவரி 2021, 10:13 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி நின்றதால், அறுவடைக்குத் தாயராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து அழுகியது.

இதனால், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி காப்பீடு நிறுவனம் பயிர் இழப்புக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அதற்கான பயிர் சேதக் கணக்கெடுப்பினை உடனடியாக தொடங்க வேண்டும். பயிர்ச்சேதம் குறித்து வருவாய்த்துறை வேளாண்மைத்துறை இணைந்து கள ஆய்வு செய்து அதன் பேரில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.

பெருகவாழ்ந்தானில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் இழப்பீடு,  நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகள்.

பெருகவாழ்ந்தானில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் இழப்பீடு,  நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகள்.

பெருகவாழ்ந்தான் கடைவீதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கோட்டூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஜிகே அண்ணாதுரை தலைமை வகித்தார். ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் வி.எஸ்.ஆர். தேவதாஸ் முன்னிலை வகித்தார். இதில் பெருகவாழ்ந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், மழையால் அழுகிப் போன நெல் பயிர்களுடன் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து, தகவலறிந்து போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த கோட்டூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன் பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது . இதனால், ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.