இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழகத்தில் கரோனா பரிசோதனை குறைக்கப்படவில்லை: தமிழக முதல்வர்

மற்ற மாநிலங்களில் கரோனா பரிசோதனை குறைக்கப்பட்டாலும் தமிழகத்தில் கரோனா பரிசோதனை குறைக்கப்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
தமிழகத்தில் கரோனா பரிசோதனை குறைக்கப்படவில்லை: தமிழக முதல்வர்
Updated On :29 ஜனவரி 2021, 9:06 am

DIN


சென்னை: மற்ற மாநிலங்களில் கரோனா பரிசோதனை குறைக்கப்பட்டாலும் தமிழகத்தில் கரோனா பரிசோதனை குறைக்கப்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னும் இரண்டு நாள்களில் நிறைவடையவிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது கரோனா பாதித்து 4,629 பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாட்டிலேயே கரோனா பரிசோதனைக்காக ஆய்வகம் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலம் தமிழகம்தான். பிற மாநிலங்களில் கரோனா பரிசோதனை குறைக்கப்பட்டாலும் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை.

தமிழகத்தைப் போல பிற மாநிலங்களும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை நடத்த பிரதமரே வலியுறுத்தினார். சென்னையைப் பொறுத்தவரை ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.