கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்

14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாத தமிழக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கத்தினர் மயிலாடுதுறை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சனிக்கி

News image

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படாததைக் கண்டித்து மயிலாடுதுறை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்.

Updated On :30 ஜனவரி 2021, 7:51 am

DIN

மயிலாடுதுறை: 14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாத தமிழக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கத்தினர் மயிலாடுதுறை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் செயல்படும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு, அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணியின் நாகை மண்டல பொதுச் செயலாளர் பூவராகவன் தலைமை வகித்தார்.

தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை பொறுப்பாளர் கே.இளங்கோவன், மத்திய சங்க அமைப்பு செயலாளர் ஆர்.பத்மநாபன், கிளை செயலாளர் எம்.வெங்கடேசன், பொருளாளர் யு.செந்தில், சிஐடியு சார்பில் மத்திய சங்க துணைத் தலைவர் எம்.ராமகிருஷ்ணன் மற்றும் என்.பாரதிமோகன், ஐஎன்டியுசி கிளைத் தலைவர் சந்திரசேகரன், ஓய்வுபெற்ற ஊழியர் முன்னேற்ற நல சங்க மண்டல துணைத் தலைவர் ஏ.சிவாஜி, மண்டல இணை செயலாளர் பி.தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உண்ணாவிரதப் போராட்டத்தில் 14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேசாமல் இழுத்தடிக்கும் தமிழக அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்திட வலியுறுத்தியும்  1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த பணியாளர்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரியும்;, நிலுவையில் உள்ள பஞ்சப்படியை வழங்கவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2015-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள பஞ்சப்படியை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.