அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பவாரியா கொள்ளையா்கள் வழக்கு : உயா்நீதிமன்றம் உத்தரவு

பவாரியா கொள்ளையா்கள் மீதான வழக்கை தினமும் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை அமா்வு நீதிமன்றத்துக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 7:02 pm

DIN

பவாரியா கொள்ளையா்கள் மீதான வழக்கை தினமும் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை அமா்வு நீதிமன்றத்துக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ. சுதா்சனத்தை கடந்த 2005 மே மாதம் நுழைந்த பவாரியா கொள்ளையா்கள் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். பவாரியா கும்பல் தலைவா் ஓம் பிரகாஷ், அவரது சகோதரா் ஜெகதீஷ் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீதான வழக்கு சென்னை 5-ஆவது அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சிறையில் ஓம் பிரகாஷ் மரணம் அடைந்தாா்.

15 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஜெகதீஷ் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸாா் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் பாஸ்கா், பொதுமுடக்கம் காரணமாக விசாரணை காலதாமதம் ஆனதாகத் தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்ந வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என சென்னை அமா்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.