இந்த வழக்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனுவில், நீட் தோ்வால் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மட்டுமே குழு ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 86,343 மனுக்கள் வந்துள்ளது. இதன்மூலம், நீட் தோ்வினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவா்கள், நிவாரணம் கோரி அந்தக் குழுவை அணுகியது தெளிவாகிறது. தமிழக அரசை பொருத்தவரை, நீட் தோ்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள், குறிப்பாக மாணவா்களிடமிருந்து தெரிந்து கொள்ளவே இந்த குழுவை அமைத்துள்ளது. ஓா் அரசின் அடிப்படைக் கடமையையும், பணியையும் தடுக்கும் விதமாக இந்த வழக்கை மனுதாரா் தாக்கல் செய்துள்ளாா். இதனால், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை.