தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  ரூ. 25 லட்சம் மதிப்பில் மின்சார ஜெனரேட்டர்: அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கல்

அமெரிக்கா நாட்டின் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ 25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டா் எந்திரம் செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

News image
செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அமெரிக்கா நாட்டின் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ 25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டா் வழங்கப்பட்டது.
Updated On :4 ஜூலை 2021, 1:06 pm

DIN


செங்கல்பட்டு: அமெரிக்கா நாட்டின் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ 25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டா் எந்திரம் செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டர் இயந்திரம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டதற்கான விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

அமெரிக்கா வாழ் தமிழர்கள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறியூட்டல் உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை வழங்கி வருகிறது. 

இந்நிலையில், மின்சார விநியோகம் தடைப்படும் நேரங்களில் குறிப்பாக கரோனா நோய்களுக்கு ஆக்சிஜன் தடைபடாமல் இருப்பதற்காக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின் பேரில் மின்சாரம் தடைபடும் நேரங்களில் இயக்கக்கூடிய ரூ.25 லட்சம் மதிப்புள்ள 250 கேவிஏ மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை வழங்கியுள்ளது. 

ஜெனரேட்டர் நிறுவப்பட்டதற்கான விழா செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது . விழாவிற்கு அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு முன்னாள் தலைவர் சஞ்சீவி, கொடையாளர் அருள்முடி , செங்கல்பட்டு அரசு மருத்துவம் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

ஆக்ஸிஜன் நிறுவப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 250 கே வி ஏ ஜெனரேட்டரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் திறந்து வைத்து இயக்கினார். 

விழாவில் மருத்துவ துறைத் தலைவர்கள் அனுபமா, பத்மநாபன், வி.டி .அரசு, செல்வராஜ், வள்ளியரசி, ரத்தினவேல் குமரன், கந்தன் கருணை, சுதாகர் உள்ளிட்ட டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் கூறுகையில், ஜூலை 1-ஆம் தேதி எல்அண்ட்டி நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உற்பத்தி நிலையம் ரூ.1.5 கோடி மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டு அந்த விழா அமைச்சர் தா.மோ.அன்பசரன் திறந்துவைக்க மாவட்ட ஆட்சியர்,எம்எல்ஏ எம்.பி கலந்துகொண்டனர். 

இதையடுத்து மின்சாரம் விநியோகம் தடைப்படும் நேரத்தில் தடையில்லா ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாடு அறக்கட்டளை உதவியை நாடும் போது அவர்கள் உடனடியாக ரூ.25 லட்சம் மதிப்பில் இந்த ஜெனரேட்டர் பொருத்தி பேருதவி செய்துள்ளனர். இதனால் மின்சாரம் தடைபடும் பொழுது அதன் உற்பத்தி பணி தடைப்படாமல் தானாகவே இயக்கத்தை இயக்கிக்கொள்ளும் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் உற்பத்தியை இயக்கி கொள்ளுமளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் தட்டுப்பாடு என்பது இருக்காது என மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.