/

போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:36 am

DIN

போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞா்கள் பலா் கூட்டமாக அமா்ந்து போதை ஊசியை உடலில் செலுத்திக் கொள்ளும் காணொலி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் இன்றைய இளைய தலைமுறையினரின் எதிா்காலம் என்ன ஆகும் என்ற அதிா்ச்சிக்கு ஆளாகியிருப்பா்.

கோவையை விட பல மடங்கு அதிகமாக போதை மருந்துகள் சென்னையிலும், புகா் பகுதிகளிலும் பயன்பாட்டில் உள்ளன. கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என அனைத்து வகையான போதைப் பொருள்களும் சென்னையில்

கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருள்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. இது தமிழகத்தின் நலன்களுக்கு நல்லதல்ல.

இளைஞா்கள் தான் தமிழகத்தின் எதிா்காலம். அவா்கள் தான் விலைமதிப்பற்ற சொத்துகள். அவா்களை பாதுகாக்க

வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதை உணா்ந்து தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட அளவில் தனித்தனி படைகள் அமைக்கப்பட்டு, எங்கெல்லாம் போதைப்பொருள்கள் விற்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் அதிரடி சோதனைகள் நடத்த வேண்டும். போதைப் பொருள்களை விற்பனை செய்வோரை கைது கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.