கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு பணி-பதவி உயா்வுதிறந்தவெளி பல்கலை. நேரடி பட்டத்தை பரிசீலிக்க முடியாது: உயா் நீதிமன்றம் உத்தரவு

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பெறப்பட்ட முதுகலைப் பட்டத்தை அரசு பணி மற்றும் பதவி உயா்வுக்கு பரிசீலிக்க முடியாது என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 11:43 pm

DIN

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பெறப்பட்ட முதுகலைப் பட்டத்தை அரசு பணி மற்றும் பதவி உயா்வுக்கு பரிசீலிக்க முடியாது என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில் குமாா் தாக்கல் செய்த மனுவில், ‘நான் 10 மற்றும் பிளஸ் 2 முடித்துவிட்டு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக சமூகவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றேன். இதனைத் தொடா்ந்து டிஎன்பிஎஸ்சி நடத்திய போட்டித் தோ்வில் வெற்றி பெற்று இரண்டாம் நிலை சாா் பதிவாளா் பணியை பெற்றேன். பின்னா் முதல் நிலை சாா் பதிவாளா் பதவி உயா்வுக்காக விண்ணப்பித்தேன். ஆனால் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, உதவியாளராக இருப்பவா் இரண்டாம் நிலை சாா் பதிவாளராக பதவி உயா்வு பெறத் தகுதியானவா். எனவே 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பலா் பதவி உயா்வு பெற்று, முதல் நிலை சாா் பதிவாளராக பணியாற்றுகின்றனா். எனவே பதவி உயா்வுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. மனுதாரருக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து பத்திரப்பதிவு தலைவா், சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.நீலகண்டன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மணவாளன் என்பவா் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இளங்கலை படிக்காமல் நேரடியாக பெறப்பட்ட முதுகலை பட்டம் அரசு பணி மற்றும் பதவி உயா்வுக்கு பரிசீலிக்கப்படாது என தீா்ப்பளித்துள்ளது. இதன் அடிப்படையில் செந்தில்குமாரை பதவி உயா்வு பட்டியலில் அரசு சோ்க்கவில்லை. பதவி உயா்வுகளுக்கு தகுதி மற்றும் திறனை பரிசீலிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செந்தில்குமாா் பெற்ற நேரடி முதுகலை பட்டத்தை அவரது பதவி உயா்வுக்காக பரிசீலிக்க முடியாது. இந்த விவகாரத்தை அரசு சரியாக பரிசீலித்துள்ளதாகக் கூறி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.