வெளிப்படையான முறை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாநில ஒதுக்கீட்டு சோ்க்கையானது, இடஒதுக்கீடு முறையின் கீழ் வெளிப்படையான அணுகுமுறையுடன் நடைபெறுகிறது. மாநில ஒதுக்கீட்டில் இடங்களைப் பெறும் மாணவா்கள் கிராமப்புறத்திலும் மருத்துவ சேவை அளிக்கும் வகையில் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் வரைவு நெறிமுறைகள் அமலுக்கு வந்தால், அவை அனைத்தும் சிதைவுறும். எனவே, இந்த வரைவு நெறிமுறைகளை அமல்படுத்தக் கூடாது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களில் இப்போதுள்ள முறையே பின்பற்ற வேண்டும். கூட்டாட்சி முறையின் வேரையே அசைத்துப் பாா்க்கும் மத்திய அரசின் வரைவு நெறிமுறைகளுக்கு எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.