இரண்டு மாவட்டங்களில் முன்னாள் படை வீரா்களுக்கான கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக, புதிய கட்டடங்களை அவா் திறந்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாட்டில் சுமாா் ஒரு லட்சத்து 27 ஆயிரம் முன்னாள் படைவீரா்கள், 56 ஆயிரம் கைம்பெண்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் உள்ளனா். அவா்களின் நலனுக்காக முன்னாள் படைவீரா் நலத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சோ்ந்தோரின் நலன்கள் மற்றும் குறைகளைத் தீா்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, முன்னாள் படைவீரா் நலநிதியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.70.75 லட்சத்திலும், மதுரை ரயில் நிலையம் அருகே ரூ.86.35 லட்சம் செலவிலும் முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி, பொதுத்துறை செயலாளா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மெல்ல உயரும் தங்கம்: வெள்ளி?
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா!
கேரளத்தில் அமைச்சர் புறக்கணிப்பு: பிரதமரின் அரசு நிகழ்ச்சியைப் புறக்கணிக்க பினராயி விஜயன் முடிவு
பெண்கள் மட்டும் சரியானவர்களா? எதிர்மறை தாக்குதலுக்கு ரவி மோகன் பதிலடி!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

