கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சி: ஆம்புலன்ஸ் உரிமையாளரின் மனைவி, குழந்தைகள் தற்கொலை முயற்சி; சிறுவன் உயிரிழப்பு

திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளரின் மனைவி மற்றும் குழந்தைகள் 4 பேர் விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதில் சிறுவன் உயிரிழந்தான். 

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2021, 11:36 am

DIN

திருச்சி: திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளரின் மனைவி மற்றும் குழந்தைகள் 4 பேர் விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதில் சிறுவன் உயிரிழந்தான். 

திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குமலை வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார்(45). இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளதுடன் மேலும் 4 ஆம்புலன்ஸ்களை வைத்தும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி(40) மகள்கள் தனலட்சுமி (19),  திவ்யா (17), மகன் விக்னேஸ்வரன் (13) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை மாலை வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு துவாக்குடியில் உள்ள வட்டார அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மேலும், சித்ராதேவி, தனலட்சுமி, திவ்யா ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. நந்தகுமார் உதவும் மனப்பான்மையுடன் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குடும்பத்தினருக்கு பிடிக்காததால் தகராறு ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என  பல்வேறு கோணங்களில் போலீஸôர்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த  விக்னேஷ்வரன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும்  சிகிச்சையில் உள்ள மகள்களான தனலட்சுமி திருச்சியில் தனியார் கல்லூரியில் பி.காம்., படிப்பும்,  திவ்யா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம்  வகுப்பும் படித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.