மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர்

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :14 ஜூன் 2021, 5:48 am

DIN

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாதம் 10-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிா்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. 
அதன்படி, தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. மதுக்குடிப்போர் இன்று காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். 
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். இந்த நிலையில், போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பல்வேறு விமர்சனங்களுககு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும். டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.