மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தம்மம்பட்டியிலிருந்து எல்லை தாண்டும் மதுப்பிரியர்கள்

சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால், தம்மம்பட்டி பகுதி மதுப்பிரியர்கள், எல்லை தாண்டிச் சென்று மது வாங்கி வருகிறார்கள்.

News image
தம்மம்பட்டியிலிருந்து எல்லை தாண்டும் மதுப்பிரியர்கள்
Updated On :15 ஜூன் 2021, 5:36 am

DIN

தம்மம்பட்டி:  சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால், தம்மம்பட்டி பகுதி மதுப்பிரியர்கள், எல்லை தாண்டிச் சென்று மது வாங்கி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு நேற்று (திங்கள்கிழமை) முதல், புதிய தளர்வுகளுடன் பொது முடக்கம்  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கோவை, சேலம் நாமக்கல், தஞ்சை, நாகை உள்பட 11 மாவட்டங்களுக்கு புதிதாக தளர்வுகள் இன்றி பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய தளர்வுகள் அளிக்கப்பட்ட 27 மாவட்டங்களில், உரிய வழிகாட்டுதலின் படி, டாஸ்மாக் மதுக்கடைகள், ஜீன் 14 முதல் திறக்கப்பட்டன. அதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த மதுப்பிரியர்கள்,  அருகில், தளர்வுகள் அளிக்கப்பட்ட மாவட்டங்களின் ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். 

அதன்படி, சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், தம்மம்பட்டி சுற்றுவட்டார மதுப்பிரியர்கள், திருச்சி மாவட்ட எல்லையோரத்தில், தம்மம்பட்டியில் இருந்து, சில கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதர்பேட்டை, உப்பிலியாபுரம் ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.