நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெ. மேகநாதரெட்டி பொறுப்பேற்பு

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

News image

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி

Updated On :28 ஜனவரி 2024, 8:55 am IST

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
    
சென்னை மாநகராட்சியில் பணிகள் துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த ஜெ.மேகநாதரெட்டி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணைப்படி வியாழக்கிழமை பொறுப்பேற்றார் .  

கடந்த 2013 -ஆம் ஆண்டு  ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றாா்.  பின்னா் டிசம்பர் - 2015 முதல் பிப்ரவரி - 2018-ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்டம் மேட்டூரில் சார் ஆட்சியராகவும், பிப்ரவரி 2018 முதல் செப்டம்பர் - 2018-ஆம் ஆண்டு வரை நில நிர்வாகத்துறை இணை ஆணையாளராகவும், செப்டம்பர் - 2018 முதல் மார்ச் - 2020-ஆம் ஆண்டு வரை வணிகவரித்துறை இணை ஆணையாளராகவும், மார்ச் - 2020 முதல் மே - 2021-ஆம் ஆண்டு வரை சென்னை மாநாகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளராகவும், செப்டம்பர் - 2020 முதல் மே - 2021-ஆம் ஆண்டு வரை சென்னை மாநாகராட்சி பணிகள் துணை ஆணையாளராகவும் பணியாற்றினாா்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.