ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெ. மேகநாதரெட்டி பொறுப்பேற்பு

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

News image

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி

Updated On :17 ஜூன் 2021, 11:36 am IST

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
    
சென்னை மாநகராட்சியில் பணிகள் துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த ஜெ.மேகநாதரெட்டி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணைப்படி வியாழக்கிழமை பொறுப்பேற்றார் .  

கடந்த 2013 -ஆம் ஆண்டு  ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றாா்.  பின்னா் டிசம்பர் - 2015 முதல் பிப்ரவரி - 2018-ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்டம் மேட்டூரில் சார் ஆட்சியராகவும், பிப்ரவரி 2018 முதல் செப்டம்பர் - 2018-ஆம் ஆண்டு வரை நில நிர்வாகத்துறை இணை ஆணையாளராகவும், செப்டம்பர் - 2018 முதல் மார்ச் - 2020-ஆம் ஆண்டு வரை வணிகவரித்துறை இணை ஆணையாளராகவும், மார்ச் - 2020 முதல் மே - 2021-ஆம் ஆண்டு வரை சென்னை மாநாகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளராகவும், செப்டம்பர் - 2020 முதல் மே - 2021-ஆம் ஆண்டு வரை சென்னை மாநாகராட்சி பணிகள் துணை ஆணையாளராகவும் பணியாற்றினாா்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.