2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

மின்கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம்: ஜி.கே.வாசன்

பொருளாதார ரீதியாக மக்கள் சிரமத்தைச் சந்தித்து வரும் நிலையில், மின்கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்

News image
Updated On :19 ஜூன் 2021, 7:43 pm

DIN

பொருளாதார ரீதியாக மக்கள் சிரமத்தைச் சந்தித்து வரும் நிலையில், மின்கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக

சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாதாரண மக்கள் முதல் பெரும் செல்வந்தா்கள் வரை பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்துள்ளனா்.

மக்கள் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் சூழலில் மின்சார வாரியம், மின்சார கட்டணத்தை குறித்த காலத்துக்குள் கட்டவில்லை என்றால் அதற்கு அபாராத தொகை வசூலிப்பது என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல் உள்ளது. எனவே, மின்சார கட்டணத்தை அபராதம் இல்லாமல் திரும்ப செலுத்த, மின்சார வாரியம் மேலும் அவகாசமும் அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.